களுத்துறை சிறைச்சாலை சுவர் மீது வீசப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் போதை பொருள் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று இந்த பொதி வீசப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு தரப்பினரால் அது கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பொதியிலிருந்து 3 தொலைபேசிகள், 4 புகையிலைகள், 5 கிராம் ஐஸ் ரக போதை பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.