பெண் ஒருவரை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட காவற்துறை அதிகாரி எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தலாத்துஓயா காவல்நிலையத்தில் சேவையாற்றிய 53 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டில் உள்ள பெண் ஒருவருக்கே இவ்வாறு சந்தேக நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.