மான் இறைச்சி, துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

kaithu

இறக்குவானை பகுதியில் 22 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடமிருந்து 12 உள்ளூர் துப்பாக்கிகளும் 12 நேரடி வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்திய வண்டியும் காவற்துறை தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் 52 – 65 வயதுக்குட்பட்ட இறக்குவானை மற்றும் இரத்தினபுரி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.