நேற்று மட்டக்களப்பு – கரடியனாறு ,கித்துள் பகுதியில் வருமையால் வாடும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தால் சில உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்போது ,குறித்த குடும்பத்தினருக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குறித்த குடும்பத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் இருப்பதால் அவர்களுக்கு தேவையான கொப்பிகள் ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவுனர்களில் ஒருவரான பேரின்பராசா லோஜிதன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினர் பல ஏழைகளுக்கும் புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளில் எந்த உதவிகளும் கிடைக்காதவர்களுக்கும் பல உதவிகள் தொடர்ந்தும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.