பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அச்சுவேலி பொதுச் சந்தை வியாபாரிகள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

covid19 1 1
covid19 1 1

அச்சுவேலி பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 33 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அச்சுவேலி பொதுச் சந்தையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் நால்வரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் அச்சுவேலி பொதுச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 33 பேரின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.