தென் மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

Rainning
Rainning

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று (15) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை பொழியும் சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளிலும் காலையில் பனிமூட்டம் நிலவும் என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.