மேல் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வாகனங்கள் பறிமுதல்

1584928526 curfew violators
1584928526 curfew violators

மேல் மாகாணத்தில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 28 உந்துருளிகளும், 3 பார ஊர்திகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்தார்.

அத்துடன், கவனயீனமாக வாகனத்தை செலுத்தியமை தொடர்பில் 128 உந்துருளி ஓட்டுநர்களுக்கு எதிராகவும், அதிக வேகத்தில் பயணித்த 57 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட சுற்றிவளைப்பின் ஊடாக நேற்றைய தினத்தில் 4, 962 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்தார்.