லொகுபண்டாரவில் இறப்பு ஈடு செய்ய முடியாதது-பிரதமர்!

photo 1 1 1
photo 1 1 1

முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான வி.ஜே.மு.லொகுபண்டாரவில் இறப்பு ஈடு செய்ய முடியாதது.

அரசியல் பயணத்தில் தாய் நாட்டுக்காக எம்முடன் இவர் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளார்.

மக்கள் சேவைக்கான இவரது அரசியல் பங்களிப்பு பிரதானமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அரசியலில் மாத்திரமல்ல பொது சமூக சேவையிலும் அர்ப்பணிப்புடன் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார செயற்பட்டமை மறக்க முடியாத நினைவுகளாகும். கடந்த கால சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் சுவைபட எடுத்துரைப்பார்.

சபாநாயகராகவும், அமைச்சராகவும், ஆளுநராகவும் இவர் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய சேவையினை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.அவரது சேவை என்றும் நிலைத்து நிற்கும்.இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.