பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் பட்சத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்களே கூறி வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்திய உதவியுடன் தென் மாகாணத்தின் வலஹந்துவ தோட்டப்பிரிவில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.