நாட்டில் மேலும் 756 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 743 பேர் திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் 13 பேர் சிறைச்சாலை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6ஆயிரத்து 352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.