குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL
0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அப்பணத்தில் தமக்குரிய பங்கை வழங்குமாறு கோரி வவுனியாவிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த குழுவினரால் கடத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறுபேர் நேற்று வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.