ஜெனிவாவில் இந்தியா ஸ்ரீலங்காவைக் கைவிடாது! வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

images 9
images 9

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரின் போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கையெழுத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.

குறித்த கடிதம் ஸ்ரீலங்காத் தூதரகமூடாக இந்தியப் பிரதமரிடம் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், ஜெனிவா அமர்வின் போது இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்கும் எனவும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.