திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 12
625.500.560.350.160.300.053.800.900.160.90 12

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் கொலன்னாவையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.