கொழும்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 722 பேரில் 223 கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 160 பேர், இரத்தினபுரி மாவட் டத்தில் 75 பேர் , கண்டி மாவட்டத்தில் 49 பேர், குருணாகல் மாவட்டத்தில் 29 பேர், களுத்துறை மாவட்டத்தில் 25 பேர் , கேகாலை மாவட்டத்தில் 22 பேர் மற்றும் பதுளை மாவட் டத்தில் 38 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 14 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 12 பேர் , கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 8 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 07 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், அம்பாறை மாவட்டத்தில் 04 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 பேர் , மன்னார் மாவட்டத்தில் ஒருவர் அடங்கலாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 09 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.