1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

kaithu

மாகொல பிரதேசத்தில் 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வணிகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 352,000  ரூபா பணத்தொகையுடன் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.