வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்

image 6487327
image 6487327

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தாயார் ஒருவர் நேற்றைய தினம் (18)சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்ற தாயாரே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார் கடந்த 2009 ஆண்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்த்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார் இன்றுவரை மகனை காணாமுடியாத நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.