“வாகை” இலவசக்கல்விநிலைய திறப்பு விழா நிகழ்வு வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இன்று இடம்பெற்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கயேந்திரன் ஆகியோர் கல்விநிலையத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.
மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்தும் நோக்குடன், ஆறுஇலட்சம் ரூபாய் செலவில் குறித்த கல்விநிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக
இத்தாலி வாழ் தமிழ் உறவுகளின் நிதிபங்களிப்பில் அமைக்கப்பட்டு
இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் ஐ.செல்வநாயகம், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் இ. சௌந்தர்ராச், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.