சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பில் சரியான தகவல் வெளியானதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய நபர்கள் அரசியலிலிருந்து விடைபெற வேண்டிய நிலையேற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததன் பின்னர், அக்கட்சிக்குள் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. உடைந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.