சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

kaithu
kaithu

பியமக, சியபலாபே சந்தியில் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 15 நபர்களை காவல்துறையினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது மூன்று மோட்டார் சைக்கிள்களும், ஆறு முச்சக்கர வண்டிகளும் பியகம காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் பந்தயமானது பண வெகுமதிக்காக பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள், நேற்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டும் உள்ளனர்.

அவர்களில் 7 பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், ஏனையவர்களை பிணையில் விடுத்தார்.