கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ கடந்தது

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1

நாட்டில் நேற்றைய தினம் 518 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியில் 487 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,517 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 811 பேர் நேற்று குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 75,110 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 4,957 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 15,583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 354,352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.