இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்மானம் கிடைக்காவிட்டால் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதால், நேற்று நடைபெற இருந்த அடையாள பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்ததாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட மேலும் குறிப்பிட்டார்.
மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து வழித்தடத்தை, இரட்டை வழித்தடங்களாக சீரமைக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.