காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 பேரும், மார்ச் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதில் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் 13 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.