சுகாதார அமைச்சு வளாகத்தில் பதற்றம்!

health ministry
health ministry

சுகாதார அமைச்சின் வளாகத்தின் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சு வளாகத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைசார் 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியை மேற்கொண்டுள்ளது.

சுகாதாரத்துறை பணியார்களின் இந்த போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.