நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் பலி

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

வாகன விபத்துகளால் மாத்திரம் நேற்றைய தினத்தில் 12 பேர் மரணித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

11 வாகன விபத்துகளில் இந்த மரணங்கள் பதிவானதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்

உந்துருளிகளை செலுத்திய 8 பேரும், பாதசாரிகள் இருவரும், பயணிகள் இருவரும் இவ்வாறு மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மாத்திரம் 6 வாகன விபத்துகள் பதிவாகின.

ஏனையவை அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்கள் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.