சுகாதார தொண்டர்களின் போராட்டம்- வட மாகாண ஆளுநருடன் மாவை பேச்சு

mavai
mavai

சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கு இன்று காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் இன்று காலை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.