இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவுக்கு தனது கணவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை

download 8 5
download 8 5

இலங்கை ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு முறை பதவி வகித்த போதும் தனது கணவரை வீதியில் வைத்து கொலை செய்தது யார்? என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது ஒரு கட்டுக்கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய குமாரதுங்கவின் சகோதரி நெராயா ரூபா குமாரதுங்க இதை கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார்.

இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் நுழைய முடியாது போயிருக்கும் என்றும் குறிபப்பிட்டுள்ளார்.

எனினும், தனது கணவரின் கொலை குறித்து விசாரிக்காததற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தனக்கு எந்தவிதமான குறைகளும், மனக்கசப்பும் இல்லை என்று ரூபா தெரிவித்துள்ளார்.