மேலும் 672 பேர் பூரணமாக குணமடைவு!

image 4
image 4

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 672 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 76,514 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.