பழ. நெடுமாறன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி கிளிநொச்சியில் சிறப்பு வழிபாடு!

IMG 20210226 081201
IMG 20210226 081201

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் குறித்த வழிபாடு காலை 8 மணியளவில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பிர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் குணமடைய வேண்டி விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்தவழிபாட்டில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.