காவல்துறை பரிசோதகரை துப்பாக்கியால் சுட முயன்றவர் கைது

kaithu

சிலாபம் காவல்துறை தலைமையகத்தின்  பிரதம காவல்துறை பரிசோதகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இருவருக்கிடையில் தொழில் தொடர்பாக ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் காவல்துறை பரிசோதகர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள காவல்துறை சார்ஜன்ட் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர்,குறித்த சார்ஜன்டை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு அவரை கைது செய்துள்ளனர்.