பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் வீழ்ந்து 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
கொஸ்லாந்தை காவல்துறை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
மாத்தறையில் இருந்து, ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.