கொழும்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF
202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF

நாட்டில் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட 497 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 151 பேருக்கு நேற்றைய நாளில் தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 89 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 39 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 37 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 29 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 27 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 23 பேருக்கும், காலி மாவட்டத்தில் 17 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பேருக்கும், மொனராகலை மாவட்டத்தில் 4 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.