வன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு

IMG 0e924b9e5851b50c499f4d93e58c886d V
IMG 0e924b9e5851b50c499f4d93e58c886d V

வன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களுக்கான நியமனம் வழங்கும் . நிகழ்வு நேற்று வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலையில் மனித உரிமைகளுக்கான சமாதான
தூதுவர் அமைப்பின் தேசிய பணிப்பாளர் வைத்தியர் எம் . எஸ் . சாதீக் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்திற்கான குழுக்களாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் . சுதர்சினியும் நெடுங்கேணி பணிப்பாளராக கு . நவஜீவன் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளராக இ.டிரோஜன் , வவுனியா மாவட்ட செயலாளராக யோ , டெலின் ரேவதி , மற்றும் கல்விப்பிரிவிற்கு முகுந்தன் , முல்லைதீவு மாவட்டத்தின் பணிப்பாளராக பெலிக்ஸ் பவுல் நிரோஜன் , மன்னார் மாவட்டத்திற்கு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவின் தலைவராக ப.தபித்தாள் . மற்றும் உதவிப்பணிப்பாளர்களுக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் வடமாகாணப் பணிப்பாளரும் சுற்றுச் சூழல் அபிவிருத்தித்திட்டத்தின் தேசிய பணிப்பாளருமான வைத்தியர் எம் . எஸ் . கணேஸ்வரன் , மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதரக அமைப்பின் பெண்கள் மற்றும் சிறுவர் இலங்கைக்கான பணிப்பாளர் நஸ்ரினா . மனித உரிமைகளுக்கான துாதரக அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகரும் பிரபல தொழிலதிபருமான பணிப்பாளர் ஜே . கே . ஜெயக்குமார் சமாதானத் துாதரக அமைப்பின் வவுனியா மாவட்டப்பணிப்பாளர் மற்றும் வடமாகாண திட்டமிடல் பணிப்பாளர் சு . சுலக்சன் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் வைத்திஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்