வட மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா!

download 35
download 35

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 236 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 52 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள். 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றுவிட்டு வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 463 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கொடிகாமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் என இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கும் அவரது பேரனுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.-