நீதிமன்றம் முன் குடிபோதையில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட 15 பேர் கைது

kaithu

உடுகம நீதவான் நீதிமன்றம் முன் குடி போதையில் முறைக்கேடாக செயற்பட்ட 15 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராட வந்த இவர்கள் குடிபோதையில் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இவ்வாறு செயற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஹக்மீமன பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.