வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; அறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

KJKJ
KJKJ

சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே ஆரம்பத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இச் சம்பவத்தில் 20, 22, 25, 28 , 30 ஆகிய வயதினையுடைய ஆச்சிபுரத்தினை சேந்த நால்வரும் மதுரா நகரினை சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.