பரீட்சார்த்திகள் 45 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தர வேண்டும்- பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்!

sanath.pujitha 1
sanath.pujitha 1

நாளைய தினம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் 45 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதேபோல், அவசர நிலைமைகளுக்காக நாடு முழுவதும் 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதென கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சைகள் நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களிலும் இன்று (28) தொற்று நீக்கப்பட்டுள்ளன.