மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

625.500.560.350.180.600.608.800.900.160.90
625.500.560.350.180.600.608.800.900.160.90

கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொஹினார் ஒழுங்கை, காபுர் வீதி, சின்னதோன வீதி, ரெலிகம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.