பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவரின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று (01) புதுக்குடியிருப்பு காவல்துறையினரினால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறிதரன், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரினால் இன்று எனது காரியாலயமான அறிவகத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சம்மாந்துறை காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாகவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.