இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் ( Bernard lelarge) யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மாநகர சபையின் செயலாளர் அ.சீராளன் உள்ளிட்டவர்களும் இனைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.