அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற மண்டான் நன்நீர்த் தொடுவாயில் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 02T213155.682 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 02T213155.682 1

யாழ்ப்பாணம் – வடமராட்சி, மண்டான் நன்நீர்த் தொடுவாயில் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் விடும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடும் ஆரம்ப நிகழ்வு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்று காலை மண்டான் நன்நீர்த் தொடுவாய்ப் பகுதியில் இடம்பெற்றது.

அமைச்சர் தொடுவாயின் பகுதியில் இறால் குஞ்சுகளை விட்டார்.
இப் பகுதியில் இறால் பிடிக்க 27 மீனவர்களுக்கான அனுமதி பத்திரம், அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.