விதைத்துக் கொண்டே இருக்கிறோம் எதிர்காலத்திற்காக முயற்சிக்கிறோம் எமது எதிர்கால சந்ததியின் பசுமையான வாழ்வுக்காக எனும் தொனிப்பொருளில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பினரால் ஒரு தொகுதி மரக்கன்றுகள் கிளிநொச்சி சிவநகர் அ. த.க.பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பெற்றோர்கள் சமூக செயல்பாட்டாளர் குணா தீசன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பெற்றோர்களே நாங்கள் முயற்சிக்கிறோம் நீங்களும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஒவ்வொரு மாணவ செல்வங்களுக்கும் நாங்கள் மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். முடிந்தவரை அதை பராமரித்து வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்கால நன்மை கருதி நம்புகிறோம் என வன்னிதமிழ் மக்கள் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.