மகள் கடத்தப்பட்டதில் மனமுடைந்த தாயார் தற்கொலை

Death body 720x450 2
Death body 720x450 2

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏரம்பமூர்த்தி நிஷாந்தி எனும் 37 வயதுடைய தாயொருவரே நேற்று புதன்கிழமை (03.03.2021) மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அண்மையில் உயர்தர பிரிவில் பரிட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் கடத்திச் சென்ற நிலையில், சம்பவத்தினை நினைத்து மனமுடைந்த நிலையிலேயே குறித்த தாயார் தனது வீட்டில் யாரும் இல்லா நிலையில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்