ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சீனா

2021 03 04
2021 03 04

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோன, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லூ ஸஹொஹியை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இதன்போது, அவர் இலங்கை தூதுவரிடம் சீனாவின் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.

பீஜிங்கில் உள்ள தூதுவருக்கு சீனா தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு, கொவிட்-19 தொற்றின் பின்னரான பொருளாதார நிலைமைகள், செயற்திறன்மிக்க கொவிட் பரவல் கட்டுப்பாடு மற்றும் எதிர்கால உயர்மட்ட விஜயங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு சீனாவின் ஆதரவையும் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான சீனாவின் சுற்றுலாத்துறை, வர்த்தகங்கள், கொழும்பு துறைமுக நகர மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலய முதலீடுகள் என்பனவற்றுக்கான ஆதரவையும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.