பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் தடுப்பு பிரிவில் 31 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவர்களில் ஒரு வைத்தியரும், 20 புற்றுநோயாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சைகளில் உள்ள நோயாளர்களை பாராமரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வந்த 8 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த 2 ஆம் திகதி பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், அவரது தாயாருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்வாறு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.