சில பிரதேசங்களில் நாளை 20 மணிநேர நீர்வெட்டு!

water cut
water cut

இராஜகிரியவில் சில பிரதேசங்களில் நாளை (06) 20 மணி நேர நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், இராஜகிரிய, மொரகஸ் முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்தை போன்ற பகுதிகளில் நாளை (06) காலை 9 மணியிலிருந்து நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.