போலி ஆவணங்கள் தயாரித்த சந்தேக நபர்கள் கைது!

kaithu

போலி ஆவணங்களை தயாரித்து வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களிருவரை மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்தில் வாகனங்களை பெற்று அவற்றுக்கான போலி உறுதிப்பத்திரங்களை தயாரித்து , குறைந்த விலையில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்த இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த சந்தேக நபர்கள் முல்லேரியா மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இதுபோன்ற 17 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.4