வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டவர்!

Maranam
Maranam

தங்காலை-மாரகொல்லிய பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

68 வயதான வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.