யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு ​கொரோனா!

image 3 3
image 3 3

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று 413 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றித் திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

மற்றையவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்டதால் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நவாலியில் உள்ள ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் விஸ்வமடுவுக்கு பேருந்தில் சென்று வரும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.