பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை

ol student
ol student

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சை மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச்செய்யப்படும் எனவும் இது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமையன்று பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பரீட்சை முடிவுற்றதும் மாணவர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.