வவுனியா நகரசபை மண்டபத்தில் சர்வதேசமகளீர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
சர்வதேசமக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரத்தினகுலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ் பி்ரதேசசபையின் செயலாளர் சுகந்தி கிசோர், வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எம்.வி.குரூஸ், நூலகர் பாமினி உருச்ந்திரன், இந்து அன்பகத்தை சேர்ந்த சாமி அம்மா, பிரதிப் காவல்துறை மா அதிபர் லால் செனவிரத்தின உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.